Posts

Showing posts from 2025

அவன் ஏன் கூலியானான்?

Image
தஞ்சை ஆட்டு மந்தை தெருவின் ஓரத்தில் இருந்தது அந்த ஓலைக் குடிசை. அப்பா கோவிந்தராஜ், அம்மா தனலட்சுமி மற்றும் அவர்கள் பெற்ற ஆறு குழந்தைகளின் உலகம் அது. முத்துப்போலப் பிறந்த ஆறு பிள்ளைகளில், சந்துருதான் கடைசி. அவனுக்கு நான்கு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருந்தனர். அப்பா வலுவிழக்க, குடும்ப வறுமையின் அனல் தணிக்க, தனலட்சுமி அம்மா விடியற்காலை 4 மணி முதலே தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி வாசல் கடையில் இடியாப்பம் விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மூத்த பிள்ளைகள் எப்படியோ படித்து, அவரவர் வேலைகளில் அமர்ந்து, தங்கள் குடும்பங்களை  மட்டுமே கவனிக்க அவர்களுக்கு வருவாய் கிட்டியது. சிலருக்கு பொருள் இருந்தும் மனமில்லாது போனது. இளையவனான சந்துரு அந்த காலத்து பத்தாம் வகுப்பு அதாவது OLD SSLC வரை படித்திருந்தான். மேற்கொண்டு  நல்ல வேலைக்குக் காத்திருக்க அவனால் முடியவில்லை. முதுமையிலும் பெற்றோர் படும் கஷ்டம் அவன் தூக்கத்தை அசைத்துப் பார்த்தது. அலுவலக வேலைக்குப் போக, சட்டை சுத்தமாக இருக்க வேண்டும். டை கட்டி, காலணி அணிய வேண்டும். அதற்கெல்லாம் அவன் தயார் இல்லை. அதற்கான நேரம் ...

தீபம் பிளக்ஸ்

Image
  கோடை விடுமுறை     தஞ்சாவூர் கீழவாசல் குணங்குடிதாசனில் பால் சர்பத் விலையை  12 லிருந்து 15 ரூபாயாக உயர்த்தி இருந்தார்கள். கார்த்திகைச்செல்வன் அப்போது தான் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்தான். ஒரு வாரம் கூட கடக்க வில்லை. அவனுக்கு அவ்வளவு போரடித்தது. கல்லூரி சேரும் வரை, தனக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கி தரும்படி தன் அப்பாவிற்கு அழுத்தம் கொடுத்தான். பரீட்சை முடியும் வரை படிக்க வேண்டும் என்ற ஒரு வேலை இருந்தது. பரீட்சை முடிந்தவுடன் என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த பின்பு தான் இந்த பிரச்சனை வரும். அதற்கு முன்பு வரை அடுத்த ஆண்டு இதுதான் படிக்கப் போகிறோம் என்ற ஒரு தெளிவு இருக்கும். கிடைக்கும் பழைய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்திருக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் பரிதாபங்கள்     அன்று மாலை அவனது அப்பா வீடு திரும்பும் போதே "நாளை என்னுடன் வா, உன்னை ஓரிடத்திற்கு அழைத்து செல்கிறேன். ஆபீஸ்ல வேலை. கம்ப்யூட்டரெல்லாம் இருக்கும்" என்றார். கம்ப்யூட்டரா? ஹையா தன் வாழ்க்கையில் விண்டோஸ் வழியாக தென்றல் வீசப் போகிறதே!! மாக...