Sunday, May 14, 2023

செல்லையா சாரும், நானும் - பகுதி 1

 8 ஆம் வகுப்புக்கு அவரே எங்கள் வகுப்பாசிரியர் அப்போது அவரே கீழவாயில் பிரிவிற்கு உதவி தலைமை ஆசிரியரும் கூட. அவர் அன்புக்கு பாத்திரமாக நேர்ந்தது.

தலைமை ஆசிரியர் அறையில், அநேக நாட்கள் அவருடனே மதிய உணவு உண்பேன். மன்னிக்கவும் அவருடைய மதிய உணவை உண்பேன், ஏன் என்றால் அப்போது பெரும்பாலோனோர் சத்துணவு வாசிகளே.

கடலை எண்ணெய் சமையல். சுவைக்கு பஞ்சமிருக்காது.

அவர் வீட்டிலிருந்து உணவு எடுத்து வராத நேரங்களில் வஹாப் கடையில் பரோட்டோ வாங்குவது வழக்கம்.

அப்போதும் எனக்கும் 2 பரோட்டோ வாங்கி தருவார்.

அவர் அன்பு விசித்திரமானது...

தாக்கம் 1:

என் நெருங்கிய வட்டம், என்னை ஏன் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி கொண்டாய் என்று கேட்கும் போதெல்லாம், செல்லையா சார் என்னுள் வந்து அவர்களிடத்தில் இவ்வாறு சொல்லி செல்வார்.

"Eleven fools are playing and Eleven thousand People are watching".

- அரச குமாரன் பக்தவச்சலம். (இராஜ் குமார் பக்தவச்சலம்)



No comments:

Post a Comment

உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்க...