Sunday, May 14, 2023

பவுனின் குழந்தை உள்ளம்

கட்டாயம் அப்போது நான் ஐந்தாம் வகுப்பிற்கு கீழே படித்து கொண்டிருக்க வேண்டும்.

திரு. கலை மோகன் என்று ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருந்தார். அன்பானவர். முன் வரிசையில் ஒரு பல் அவருக்கு பூச்சி பல்லாக இருக்கும் என்று நினைவு.

1. அப்போது வெள்ளி கிழமை தோறும் முதல் வகுப்பு உடற்கல்வி வகுப்பாக இருக்கும். எனவே அவர் வருகையை பதிவு செய்து விட்டு பின் கிடைக்கும் சொற்ப மணித்துளிகளே எங்களுக்கு விளையாட கிடைக்கும். அதிலும் அவர் ஒரு வித்தியாசமான முறையை கையாள்வார். ஒவ்வொரு பெயருடனும் ஏதேனும் ஒரு பெயரை விளையாட்டாக இணைத்து அழைத்து வருகையை பதிவார்.

உதாரணமாக...

ஆசை தம்பி என்பதை "ஆசை தம்பி தோசை கொண்டா" என்பார்.

பிரதாப் என்பதை "பிரதாப் போத்தன்" என்பார்.

முழு வகுப்பும் அவர் அழைக்கும் தொனி கண்டு ரசிக்கும் மகிழும். இவை அனைத்தும் ABCD மரம் (புங்க மரம்) அருகில் நடக்கும்.




2. அடுத்து அனைவரும் விளையாட ஆயத்தம் ஆவோம். ஒரு கால்பந்து. இருவர் இருவராக விளையாட வேண்டும். நடு மைதானத்தில் பந்து வைத்து இருவரில் யார் கோல் அடிக்கிறார்களோ அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார்.

துயர நிலை என்னவென்றால் இருவரில் யாரேனும் ஒருவர் நாட் கோல் அடித்தால் இருவரும் தகுதி நீக்கம் பெறுவார்கள்.

எனக்கு பவுன் சீனி வாசன் என்று ஒரு நல்ல நண்பர் உள்ளார். இன்றும் நட்பு பாராட்டுகிறவர். பெரும்பாலும் அவருடனே நான் விளையாட கூடும். அவர் நாட் கோல் அடிப்பதை வழக்கமா செய்வார், அடித்துவிட்டு மகிழ்ச்சி கொள்வார். அப்போது நான் கோபப்பட்டிருந்தாலும் இன்று நினைத்தால் என்ன இனிமை. சிறு பிள்ளை தனங்கள் தான் என்னே அழகு!



நம் எண்ணங்களுக்கு வண்ணம் கொடுக்க ஒரு மென்பொருள் இருந்தால், எவ்வளவு இனிதாக இருக்கும்...

# நெகிழ்வு பதிவுகள்.

-இராஜ் குமார் பக்தவச்சலம்.



No comments:

Post a Comment

உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்க...