Sunday, May 14, 2023

செல்லையா சாரும், நானும் - பகுதி 3

 அறிவியல் கண்காட்சி:

பள்ளி நாட்களில் அறிவியல் கண்காட்சியை அறியப்படாதோர் இருக்க வாய்ப்பில்லை. 2004 ஆம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி வடக்கு வாசலில் உள்ள மெயின் பிரான்ச் ஸ்கூலில் நடக்க விருந்தது.

செல்லையா சாரின் தலைமையில் நாங்கள் இரு தயாரிப்பு என முடிவெடுத்தோம். ஒன்று காற்றாலை மின்சார மாதிரி. மற்றொன்று சொந்த FM ஸ்டேஷன். காற்றாலை மின்சார மாதிரிக்காவது ஒரு யோசனை இருந்தது. FM ஸ்டேஷன் எல்லாம் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான். செல்லையா சார் தான் எல்லாம்.



தேவையான அனைத்து பொருட்களையும் தஞ்சையின் எலக்ட்ரானிக்ஸ் ஹப் ஆன தெற்கு வீதியில் வாங்கினோம். கிட்ட தட்ட இரண்டு வாரங்கள். இரு குழுக்களாக தினசரி வகுப்பு முடிந்ததும் இரவு 9 மணி வரை இதற்கான வேலையில் இருப்போம். FM ஸ்டேஷன் எல்லாம் வேற லெவல். நாங்கள் நேரடி ஒளிபரப்பில் பேசியதை எல்லாம் FM ஸ்டேஷன் வாயிலாக கேட்டதை எல்லாம் முடியாது மறக்க...

ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு கண்டுபிடிப்புகளுடன் மெயின் ஸ்கூலுக்கு சென்றோம். அறிவியல் கண்காட்சியை அப்போதைய தஞ்சையின் ஆட்சியர் திரு. இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப,(இன்றைய சுகாதார துறை முதன்மை செயலர்) வந்து பார்வையிட்டதாக ஒரு ஞாபகம்.


தொடர்ந்து தினத்தந்தி செய்தி இதழில் இருந்து வந்து புகைப்படமும் பேட்டியும் எடுத்தார்கள். செய்தி தாளில் நம் போட்டோ வருவதெல்லாம் அலாதி சுகம். என்னவாக விரும்பாதாக கேட்ட கேள்விக்கு கப்பல் படை மாலுமி என்றேன். சிரிப்பு. நானோ இன்று வரை பூங்காக்களில் உள்ள மிதிபடகை விட வேறெதிலும் சென்றதில்லை.



திரும்பி வந்த ஆட்டோவில் ஆட்டோ டிரைவர் செல்லையா சாரிடம் பேசி கொண்டே வந்தார். அவர் கேட்கும் கேள்விக்கெல்லாம் செல்லையா சாரின் பதில் வியப்பளித்தது. வடக்கு வீதியில் தொடங்கிய இந்த பேச்சு வெள்ளை பிள்ளையார் கோவில் வரை தொடர்ந்தது.


ஒவ்வொரு முறை அவர் பதில் சொல்லி முடித்த பின் நானோ "சார் நீங்க எங்கயோ போய்ட்டிங்க!" என்றவாறே பட வசனத்தை அள்ளி தெளித்துக் கொண்டிருந்தேன். அதற்கு அந்த ஆட்டோ டிரைவர்-ம் "சார் எங்கயும் போல இங்க தான் இருக்காரு" என்றவாறே வந்தார். ஆம் உண்மை தான். நம் செல்லையா சார் நம்மை விட்டு எங்கும் போகவில்லை, நாமாக நமக்காக நம்முடனே வாழ்ந்து கொண்டே இருப்பார்.




No comments:

Post a Comment

உப்பு மாங்காய்

சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்க...