அப்பா

அறியாத வயசில என்ன எப்படியெல்லாம் கொஞ்சிருப்ப...

புரியாத வயசில என்ன எப்படியெல்லாம் பொறுத்திருப்ப...


அருகருகே இருந்தும் அமைதியாய் கடந்தோம்,

எதிரெதிரே இருந்தும் எதிரியாய் முறைச்சோம். 

நெசத்துல வில்லன் என்னவோ விடலைப் பருவந்தான். 




சின்ன வயசில செத்த மாதிரி நடிப்பியே !! நடிச்சது போதும் !!!

எந்திரிப்பா ! எந்திரிப்பா !!

"போனா தான் தெரியும் என் அருமை" அப்படினு சொல்லுவியே !

அருமை தெரிஞ்சிடுச்சி, அழுடான்னு விட்டிட்டு போயிட்டியா !!!

கோவந்தான் உன் பாசம், வேர்வை தான் உன் வாசம், பாவி மனம் அறியலயே!

அப்பா தான் எந்தலைவன் , இனிமேல இறைவன்னு எல்லாமே தெரிஞ்சிக்கிட்டேன்!!!

அப்பப்பா  ஒன்னு ரெண்டா நீ பட்ட துயரம்! ஆனா அத, எங்க ஒருத்தர்ட கூட  நீ  சொல்லலியே!!!

நான் ஏதும் தப்பா பேசியிருந்தா தவறாம மன்னிச்சிடுப்பா!!!




உன்ன கட்டி புடிச்சு முத்தம் கொடுக்க வரும் உழைப்பின் வாசனை தான் எனக்கு  வேணுமப்பா!!

முத்தம் கொடுக்கயிலே உன் தாடி தான் இனி குத்திடுமா?

செருப்பில்லாம  பொத்து போட்ட உன் காலுக்கு முதல் முத்தம் ,

காப்பு காச்சிய உன் கையிக்கு தருவேனே மறு முத்தம்... 

அந்த கையால இனியுந்தான் யார் என்னை தட்டி கொடுப்பா !!! 

காட்சிகள நான் ஓட்ட கண்ணு ரெண்டும் கலங்குதப்பா...

நடந்தத நான் நெனைக்க நா வறண்டு போகுதப்பா...

அளவில்லாம அழுவுறேன், ஒருமுறை தான் எந்திரிப்பா ! எந்திரிப்பா !!


இறுதி மரியாதை-ன்னு எல்லாரும் சொல்றாங்க ! ஆனா நான் உனக்கு ஒரு மரியாதையும் செய்யலியே!

குழந்தையா அழுவுறேன், வா, வந்து என்னை கொஞ்சி போப்பா!!

நீ என்னை பாத்துகிட்ட மாறி, என்னால உன்னை பாத்துக்க முடியலயே !!

கைமாறு என்ன செய்ய, கலங்கி மனம் தவிக்குதப்பா!!!

மனசு தான் ஏங்குது, என்ன மன்னிச்சிடுப்பா, மன்னிச்சிடுப்பா!!!





இழந்துட்டு தவிக்கிறவன் சொல்றேன் , இருக்கும் போதே இளகிடுங்க.. 

விட்டுட்டு வாடுறவன் சொல்றேன், விழும் முன்னே தாங்கிடுங்க.. 

படிப்பினை வந்த பின்னே, பாசந்தான் பொங்குதப்பா !

அப்பா ஒன்னோடு உறவாட, நெதமுந்தான்  மனசு விம்முதப்பா!!


-  தஞ்சையின் அரச குமாரன் 

15-05-2023

பி. கு. : என் அப்பா இன்றும் நலமாக உழைத்து சம்பாதித்து கொண்டிருக்கிறார். யாரும் தவறாக எண்ண வேண்டாம்.

Comments

Post a Comment

Popular posts from this blog

PCF - Cloud Foundry Overview - Starting, Restarting and Restaging applications

அவன் ஏன் கூலியானான்?

தட்டு வண்டியில் காளிக்கோயில் - சிறுகதை