Posts

அவன் ஏன் கூலியானான்?

Image
தஞ்சை ஆட்டு மந்தை தெருவின் ஓரத்தில் இருந்தது அந்த ஓலைக் குடிசை. அப்பா கோவிந்தராஜ், அம்மா தனலட்சுமி மற்றும் அவர்கள் பெற்ற ஆறு குழந்தைகளின் உலகம் அது. முத்துப்போலப் பிறந்த ஆறு பிள்ளைகளில், சந்துருதான் கடைசி. அவனுக்கு நான்கு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருந்தனர். அப்பா வலுவிழக்க, குடும்ப வறுமையின் அனல் தணிக்க, தனலட்சுமி அம்மா விடியற்காலை 4 மணி முதலே தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி வாசல் கடையில் இடியாப்பம் விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மூத்த பிள்ளைகள் எப்படியோ படித்து, அவரவர் வேலைகளில் அமர்ந்து, தங்கள் குடும்பங்களை  மட்டுமே கவனிக்க அவர்களுக்கு வருவாய் கிட்டியது. சிலருக்கு பொருள் இருந்தும் மனமில்லாது போனது. இளையவனான சந்துரு அந்த காலத்து பத்தாம் வகுப்பு அதாவது OLD SSLC வரை படித்திருந்தான். மேற்கொண்டு  நல்ல வேலைக்குக் காத்திருக்க அவனால் முடியவில்லை. முதுமையிலும் பெற்றோர் படும் கஷ்டம் அவன் தூக்கத்தை அசைத்துப் பார்த்தது. அலுவலக வேலைக்குப் போக, சட்டை சுத்தமாக இருக்க வேண்டும். டை கட்டி, காலணி அணிய வேண்டும். அதற்கெல்லாம் அவன் தயார் இல்லை. அதற்கான நேரம் ...

தீபம் பிளக்ஸ்

Image
  கோடை விடுமுறை     தஞ்சாவூர் கீழவாசல் குணங்குடிதாசனில் பால் சர்பத் விலையை  12 லிருந்து 15 ரூபாயாக உயர்த்தி இருந்தார்கள். கார்த்திகைச்செல்வன் அப்போது தான் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வெழுதி முடித்திருந்தான். ஒரு வாரம் கூட கடக்க வில்லை. அவனுக்கு அவ்வளவு போரடித்தது. கல்லூரி சேரும் வரை, தனக்கு எப்படியாவது ஒரு வேலை வாங்கி தரும்படி தன் அப்பாவிற்கு அழுத்தம் கொடுத்தான். பரீட்சை முடியும் வரை படிக்க வேண்டும் என்ற ஒரு வேலை இருந்தது. பரீட்சை முடிந்தவுடன் என்ன செய்வதென்று அவனுக்கு புரியவில்லை. பன்னிரண்டாம் வகுப்பு முடிந்த பின்பு தான் இந்த பிரச்சனை வரும். அதற்கு முன்பு வரை அடுத்த ஆண்டு இதுதான் படிக்கப் போகிறோம் என்ற ஒரு தெளிவு இருக்கும். கிடைக்கும் பழைய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்திருக்கலாம். கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் பரிதாபங்கள்     அன்று மாலை அவனது அப்பா வீடு திரும்பும் போதே "நாளை என்னுடன் வா, உன்னை ஓரிடத்திற்கு அழைத்து செல்கிறேன். ஆபீஸ்ல வேலை. கம்ப்யூட்டரெல்லாம் இருக்கும்" என்றார். கம்ப்யூட்டரா? ஹையா தன் வாழ்க்கையில் விண்டோஸ் வழியாக தென்றல் வீசப் போகிறதே!! மாக...

உப்பு மாங்காய்

Image
சுருக்குப்பை கிழவி. சுருக்கங்கள் சூழ் கிழவி. பார்க்கும் போதெல்லாம் கூடையுடனே குடியிருப்பாள். கூடை நிறைய குட்டி குட்டி மாங்காய்கள். வெட்டிக்கொடுப்பது தான் வேலை. கேட்பது ரெண்டே கேள்விகள்.  1. காருவாயா? எட்டணாவா? 2. உப்பா ஒரப்பா? எட்டணாக்கு மூன்று மாங்காய் கேட்டால் ஏறெடுத்து முகத்தைப் பார்த்து விட்டு, மூன்றாவது மாங்காயை வெட்டிக் கொண்டே, மூனெல்லாம் வராது என்று சொல்லும் கறார் கண்மணி. வெட்டிய பாவத்திற்காக உடனே அந்த கத்தியாலேயே உப்பைக் கொட்டிச் சுடச்சுடப் பரிகாரம் தேடும் பாசக்காரி. சின்ன கேட்டை கடந்து அந்த கூடைக் கிழவியைப் பார்த்துப் பழகி விட்டு போனோர் எத்தனையோ? பாட்டித் தொழிலுக்கு ஒரு போட்டி தொழிலோர் இல்லை. நீ சாதாரண பாட்டி அல்ல. எங்கள் எல்லோர் மனதிலும் என்றும் வாழும் என்றும் இளைய இராணிப்பாட்டியே.. ஆம், எட்டு ஆண்டுகள் எங்களை ஆட்சி செய்த இராணி தான். உன் பேரைத் தவிர வேறேதும் தெரியாது.  பேர் தெரிந்தால் போதாதா பேரனாக இருக்க... - தஞ்சையின் அரச குமாரன். 21-04-2024

படையப்பாவும் ஹெர்குலசும்

Image
                           இன்று 10-04-2024. பாட்ஷா ரஜினி சொல்லும்  நான்காம் எட்டை கடந்தவன் சரவணன். சரியாக சொல்ல வேண்டின் 1990 ஆம் ஆண்டிலேயே பிறந்த அக்மார்க் 90s கிட்ஸ் அவன். காலை எழுந்தவுடன்  பல்லைத் தேய்க்கிறானோ இல்லையோ முதல் வேலையாக செல்லைத் தேய்த்துக் கொடுக்கும் குணத்தினன். வழக்கம் போல முழித்தவுடன் முகம் கழுவாமல் முகநூல் பக்கம் வந்து விட்டான். முதல் பதிவாக அவன் கண்ணில் பட்டது இதுதான். " படையப்பா படம் வந்து இன்றோடு 25 வருடம் ஆகிவிட்டது. படையப்பா என்றதும் உங்கள் மனதில் வருவது என்ன? "  என்றது அப்பதிவு.                                        புன்முறுத்தான் சரவணன். விட்டத்தைப் பார்த்தான். கொசுவத்தி சுருளைப் போல், கருப்பு வெள்ளையில் ஒரு சக்கரத்தை, வெயில் காலத்தில் விசிறி சுற்ற முயலுமே..., அதுக்கும் காற்று வராமல் நமக்கும் காற்று வராமல், ஆமாம் அந்த வேகத்தில் மனதில் சுற்றி விட்டான...

பிரேமாவின் பெண் குழந்தை

Image
         பிரேமாவின் மூத்த ஆண் குழந்தைக்கு முன் பிறந்த இளைய பெண் குழந்தை அவள். வயலும் சேறும் இரண்டற கலந்த ஊர். முழுதாய் மூன்றாம் வகுப்பைத்  தாண்டாதவள். அதற்காக அவரது அப்பா வெங்கட் அக்குழந்தைக்கு அடுப்படியைக் கொடுத்து அழகு பார்த்தார். கல்வியை கைவிட்டதால், தன்னம்பிக்கை - துணிச்சல் கை கூட வில்லை. பிரேமா அம்மா தவறி விட, பின் வந்த சிற்றன்னையின் கொடுமைகளை அனுபவித்ததாகவும் கேள்வி.                                                      திருமணம் ஆகி சோழம் வந்தடைந்தாள். ரயிலை கண்டது, அதில் பயணம் செய்தது எல்லாம் திருமணத்திற்கு பிறகு தான். மூன்று ஆண் குழந்தைகள், பிறந்து ஒரு வருடத்திற்குள் தவறிய பெண் குழந்தை. எப்போதும் கோபப்படாத சாந்தமான முகம். வெகுளி, வெள்ளந்தி. பாசத்தைக் கூட வெளிப்படுத்த தெரியாதவள். யாரும் சிரமப்படாமல் எளிதாக ஏய்த்து விடலாம். தேவைக்கேற்ப நன்றாக ஏத்தியும் விடலாம். தந்தை சொத்தை பிரித்துத் தர ம...

தட்டு வண்டியில் காளிக்கோயில் - சிறுகதை

Image
          கந்தன் வேலைக்குச் சென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இருந்தான். காளிக் கோயிலைத் தாண்டி தான் அவன் வீட்டை அடைந்தாக வேண்டும்.  கோயிலைக் கடக்க முற்பட்டப் போது அக்கோயிலில் எஞ்சி இருந்த சில பழைமை மாறாக் காட்சிகள் அவனுக்கு அவனது பால்யத்தைத்  திரும்பி தந்தன.            எட்டாவது வகுப்பு தொடங்கிக் கல்லூரி சேர்ந்த சிறிது நாள் வரை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என அட்டவணைப்  போட்டு வாரந்தவராது அந்த காளி கோயிலுக்கு சென்றவன் அவன். அவ்வளவு பக்தியா என அவசரப்பட்டு கந்தனுக்கு அதிக மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விட வேண்டாம். கடவுள் மறுப்பை, பெருமை என அவன் கர்வம் கொண்ட காலம் அது.         பிறகு எதற்கு ?  பூக்கார அம்மா பிரேமாவின் பூக்கடைக்கு தேவையான சாமான்களை,  அவர் வீட்டிலிருந்து காளிக் கோயில் வரை, எடுத்துக் கொண்டுச் சேர்க்க, அவன் பெறும் ரூ.10 கூலிக்காக. பத்து என்பதெல்லாம் அப்போது அவனுக்கு மிகப் பெரிய எண். அதை வைத்து இரண்டு நாள் காலை இரவு சிற்றுண்டியை முடித்து...

அப்பா

Image
அறியாத வயசில என்ன எப்படியெல்லாம் கொஞ்சிருப்ப... புரியாத வயசில என்ன எப்படியெல்லாம் பொறுத்திருப்ப... அருகருகே இருந்தும் அமைதியாய் கடந்தோம், எதிரெதிரே இருந்தும் எதிரியாய் முறைச்சோம்.  நெசத்துல வில்லன் என்னவோ விடலைப் பருவந்தான்.  சின்ன வயசில செத்த மாதிரி நடிப்பியே !! நடிச்சது போதும் !!! எந்திரிப்பா ! எந்திரிப்பா !! "போனா தான் தெரியும் என் அருமை" அப்படினு சொல்லுவியே ! அருமை தெரிஞ்சிடுச்சி, அழுடான்னு விட்டிட்டு போயிட்டியா !!! கோவந்தான் உன் பாசம், வேர்வை தான் உன் வாசம், பாவி மனம் அறியலயே! அப்பா தான் எந்தலைவன் , இனிமேல இறைவன்னு எல்லாமே தெரிஞ்சிக்கிட்டேன்!!! அப்பப்பா  ஒன்னு ரெண்டா நீ பட்ட துயரம்! ஆனா அத, எங்க ஒருத்தர்ட கூட  நீ  சொல்லலியே!!! நான் ஏதும் தப்பா பேசியிருந்தா தவறாம மன்னிச்சிடுப்பா!!! உன்ன கட்டி புடிச்சு முத்தம் கொடுக்க வரும் உழைப்பின் வாசனை தான் எனக்கு  வேணுமப்பா!! முத்தம் கொடுக்கயிலே உன் தாடி தான் இனி குத்திடுமா? செருப்பில்லாம  பொத்து போட்ட உன் காலுக்கு முதல் முத்தம் , காப்பு காச்சிய உன் கையிக்கு தருவேனே மறு முத்தம்...  அந்த கையால இனியுந்தான் ய...

பேச்சுப் போட்டியும் லெடி டீச்சரும்

Image
 2002 ஆம் ஆண்டு. 6 ஆம் வகுப்பில் அடியெடுத்து வைக்கிறோம்.  மிகவும் சுறுசுறுப்பாக, உயரம் குறைவாக இருப்பார் லெடி டீச்சர்.  கணக்கு, ஆங்கிலம், அறிவியல் ஆகிய மூன்று பாடத்திற்கும் அவரே ஆசிரியர், வகுப்பு ஆசிரியை.  டீச்சரின் கையழுத்து மிகவும் அழகாக இருக்கும். லெடி டீச்சர் வகுப்பு என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அவரின் ஆங்கில புலமை அற்புதம். எனக்கெல்லாம் ஆங்கில மோகம் ஏற்பட அவரே வித்திட்டவர்.  அவர்களின் வீடு மானம்பு சாவடி அருகில் இருக்கும் ரொட்டி கடைத் தெருவை தாண்டி இருக்கும். அவ்வப்போது அவர்களின் வீட்டிற்கும் செல்வது உண்டு. அப்போது என்னிடம் மிதிவண்டி இல்லை. நானும் நண்பர் விவேக்கும் அவர் சைக்கிளில் செல்வோம். அப்போது எல்லாம்  கையை விட்டு விட்டு  ரேஞ்சர் சைக்கிள் ஓட்டுவதெல்லாம் ஹீரோயிசத்தின் உச்சம்.                                                            சைக்கிள் காரியரில் ஓசியில் உட்கார்ந்து வரும் எனக்கு அல்லு வி...

மூன்றாம் வகுப்பு - செல்வராணி டீச்சர்

Image
 அப்போது நாங்கள் மூன்றாம் வகுப்பிற்கு வந்திருக்கிறோம். தரை சீட்டிலிருந்து பெஞ்சுக்கு மாறிய நேரம். கற்பலகை(சிலேட்), கற்பலகை குச்சியில் இருந்து நோட்டு பென்சிலுக்கு தாவின எங்களது சிறு விரல்கள். திருமதி. செல்வ ராணி ஆசிரியை எங்களுக்கு அப்போது வகுப்பாசிரியராக இருந்தார். எங்கள் வகுப்பு ஆண்கள் ஆசிரியர் ஓய்வறைக்கு அருகே அமைந்திருந்தது. எங்களை அ, ஆ மற்றும் உயிர்மெய் எழுத்துக்களை நோட்டில் எழுதுமாறு பணித்தார். அனைவரும் எழுதினோம். ஆசிரியர் ஒவ்வொருவர் நோட்டாக பார்த்து கொண்டே வந்தார். அப்போது நண்பர் மணி கண்ட பிரபு நோட்டையும் எனது நோட்டையும் பார்த்து விட்டு எழுத்து அழகாக உள்ளது என்று கூறினார். அத்தோடு நிற்காமல் அனைத்து ஆசிரியர்களிடமும் எங்கள் நோட்டை காண்பித்து, "பாருங்கள் எவ்வளவு அழகாக எழுதியிருக்கிறார்கள்" என்று பரப்புரையே செய்து விட்டார். அன்று அவர் செய்து வைத்த அந்த ஊக்க துவக்கம், இன்று வரை எங்களை ஓட வைக்கின்றது. அவர் அடுத்த வகுப்பிற்கு சென்று வருவதற்க்குள் ஒரு வேடிக்கையும் நடந்து விட்டது. மற்ற மாணவர்கள் எனது நோட்டை பார்த்து எழுதி கொண்டிருந்தார்கள். அப்போது சிலர் எனது எழுத்து சரியாக தெரிய...

பவுனின் குழந்தை உள்ளம்

Image
கட்டாயம் அப்போது நான் ஐந்தாம் வகுப்பிற்கு கீழே படித்து கொண்டிருக்க வேண்டும். திரு. கலை மோகன் என்று ஒரு உடற்கல்வி ஆசிரியர் இருந்தார். அன்பானவர். முன் வரிசையில் ஒரு பல் அவருக்கு பூச்சி பல்லாக இருக்கும் என்று நினைவு. 1. அப்போது வெள்ளி கிழமை தோறும் முதல் வகுப்பு உடற்கல்வி வகுப்பாக இருக்கும். எனவே அவர் வருகையை பதிவு செய்து விட்டு பின் கிடைக்கும் சொற்ப மணித்துளிகளே எங்களுக்கு விளையாட கிடைக்கும். அதிலும் அவர் ஒரு வித்தியாசமான முறையை கையாள்வார். ஒவ்வொரு பெயருடனும் ஏதேனும் ஒரு பெயரை விளையாட்டாக இணைத்து அழைத்து வருகையை பதிவார். உதாரணமாக... ஆசை தம்பி என்பதை "ஆசை தம்பி தோசை கொண்டா" என்பார். பிரதாப் என்பதை "பிரதாப் போத்தன்" என்பார். முழு வகுப்பும் அவர் அழைக்கும் தொனி கண்டு ரசிக்கும் மகிழும். இவை அனைத்தும் ABCD மரம் (புங்க மரம்) அருகில் நடக்கும். 2. அடுத்து அனைவரும் விளையாட ஆயத்தம் ஆவோம். ஒரு கால்பந்து. இருவர் இருவராக விளையாட வேண்டும். நடு மைதானத்தில் பந்து வைத்து இருவரில் யார் கோல் அடிக்கிறார்களோ அவர் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுவார். துயர நிலை என்னவென்றால் இருவரில் யாரேனும் ஒரு...

காது புடி வாத்தியார்

Image
 காது புடி வாத்தியார் என்று பயத்துடன் அழைக்கப்பட்ட சாலமன் அய்யாவின் காது பிடிக்கு தப்பிய காதுகளும் உண்டோ? ஒருமுறை ஐந்தாம் வகுப்பில், வகுப்பு வேளையில் ஓசி tit bits தின்றதால் மாட்டி கொண்டேன். இன்னொரு முறை 7 ஆம் வகுப்பில் காப்பி அடித்ததிற்காக, நீ நான் என ஒருவரை ஒருவர் கை காட்ட முழு வகுப்பும் மாட்டி கொண்டு முழிக்க, முழு பள்ளிக்கும் பின் உதாரணம் ஆனோம். யப்பா காது, இன்னா வலி வலிக்கும். மறக்க முடியுமா அத்திருகு நாட்களை?

செல்லையா சாரும், நானும் - பகுதி 1

Image
 8 ஆம் வகுப்புக்கு அவரே எங்கள் வகுப்பாசிரியர் அப்போது அவரே கீழவாயில் பிரிவிற்கு உதவி தலைமை ஆசிரியரும் கூட. அவர் அன்புக்கு பாத்திரமாக நேர்ந்தது. தலைமை ஆசிரியர் அறையில், அநேக நாட்கள் அவருடனே மதிய உணவு உண்பேன். மன்னிக்கவும் அவருடைய மதிய உணவை உண்பேன், ஏன் என்றால் அப்போது பெரும்பாலோனோர் சத்துணவு வாசிகளே. கடலை எண்ணெய் சமையல். சுவைக்கு பஞ்சமிருக்காது. அவர் வீட்டிலிருந்து உணவு எடுத்து வராத நேரங்களில் வஹாப் கடையில் பரோட்டோ வாங்குவது வழக்கம். அப்போதும் எனக்கும் 2 பரோட்டோ வாங்கி தருவார். அவர் அன்பு விசித்திரமானது... தாக்கம் 1: என் நெருங்கிய வட்டம், என்னை ஏன் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி கொண்டாய் என்று கேட்கும் போதெல்லாம், செல்லையா சார் என்னுள் வந்து அவர்களிடத்தில் இவ்வாறு சொல்லி செல்வார். "Eleven fools are playing and Eleven thousand People are watching". - அரச குமாரன் பக்தவச்சலம். (இராஜ் குமார் பக்தவச்சலம்)

செல்லையா சாரும், நானும் - பகுதி 3

Image
 அறிவியல் கண்காட்சி: பள்ளி நாட்களில் அறிவியல் கண்காட்சியை அறியப்படாதோர் இருக்க வாய்ப்பில்லை. 2004 ஆம் ஆண்டிற்கான அறிவியல் கண்காட்சி வடக்கு வாசலில் உள்ள மெயின் பிரான்ச் ஸ்கூலில் நடக்க விருந்தது. செல்லையா சாரின் தலைமையில் நாங்கள் இரு தயாரிப்பு என முடிவெடுத்தோம். ஒன்று காற்றாலை மின்சார மாதிரி. மற்றொன்று சொந்த FM ஸ்டேஷன். காற்றாலை மின்சார மாதிரிக்காவது ஒரு யோசனை இருந்தது. FM ஸ்டேஷன் எல்லாம் கண்ணை கட்டி காட்டில் விட்ட கதை தான். செல்லையா சார் தான் எல்லாம். தேவையான அனைத்து பொருட்களையும் தஞ்சையின் எலக்ட்ரானிக்ஸ் ஹப் ஆன தெற்கு வீதியில் வாங்கினோம். கிட்ட தட்ட இரண்டு வாரங்கள். இரு குழுக்களாக தினசரி வகுப்பு முடிந்ததும் இரவு 9 மணி வரை இதற்கான வேலையில் இருப்போம். FM ஸ்டேஷன் எல்லாம் வேற லெவல். நாங்கள் நேரடி ஒளிபரப்பில் பேசியதை எல்லாம் FM ஸ்டேஷன் வாயிலாக கேட்டதை எல்லாம் முடியாது மறக்க... ஒரு ஆட்டோவை பிடித்து கொண்டு கண்டுபிடிப்புகளுடன் மெயின் ஸ்கூலுக்கு சென்றோம். அறிவியல் கண்காட்சியை அப்போதைய தஞ்சையின் ஆட்சியர் திரு. இராதாகிருஷ்ணன் இ.ஆ.ப,(இன்றைய சுகாதார துறை முதன்மை செயலர்) வந்து பார்வையிட்டதாக ஒரு...

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

Image
 ஒரு முறை, உணவு இடைவேளையின் போது விளையாடிக் கொண்டிருந்தேன். ஐந்தாம் வகுப்பு என்று நினைவு. அப்போது தமிழம்மா திருமதி. ஸ்டெல்லா அவர்கள் என்னை அழைத்து மேடை ஏற்றி விட்டார்கள். திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்து கொண்டிருந்தது. மொத்தம் இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே இருந்தார்கள். ஒரு திருக்குறள் சொன்னாலே மூன்றாம் பரிசு நிச்சயம் என புளகாங்கிதம்(பேருவகை) அடைந்தேன். முதலில் வந்த மணி கண்ட பிரபு 55 திருக்குறட்களை சொன்னார். அடுத்து வந்த நண்பர் 18 குறட்களைச் சொல்லிச் சென்றார். நானோ எந்த வித ஒத்திகையும் இல்லாமல் தொடங்கினேன். அப்படி இப்படி 14 குறட்களைச் சொன்னேன். குறைவான குறட்களை சொல்லியும் உச்சரிப்பு மற்றும் நிறுத்தம் ஆகியவற்றிற்க்காக இரண்டாம் பரிசு பெற்றேன். சான்றிதழும் லஞ்ச் பாக்ஸும் கிடைத்தது. "எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு." (424) விளக்கம்: கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும் அறிவு ஆகும்.

செல்லையா சாரும் நானும் - பகுதி 2

Image
அலுவலக அரசியலை (Office Politics) நான் அறிந்திராத காலம் அது. நண்பர்களுக்கு தோட்ட வாத்தியார் மோகன்ராஜ் சாரும், ஓவிய ஆசிரியர் பெஞ்சமின் அவர்களையும் நினைவிருக்கலாம். செல்லையா சாரை வெகுவிற்கு பிடித்த அதே சமயம், சிலர் அவர் மீது கருத்து முரண் கொண்டிருந்ததும் இயல்பே. ஆங்கிலம் ஒரு அருமையான மொழி என்று அடிக்கடி செல்லையா சார் சொல்லுவார். உண்மையில் எனக்கு ஆங்கிலத்தில் ஒரு மிகை ஆர்வம் ஏற்பட செல்லையா சாரும், 6 ஆம் வகுப்பு திருமதி லீதியால் ஆசிரியையும், 9 & 10 வகுப்புகளில் ஆங்கில ஆசிரியை திருமதி பிரேமா அவர்களும் காரணம். ஒரு நாள், ஓவிய வகுப்பின் போது, பெஞ்சமின் ஆசிரியர் அவர்கள், ஓவியத்தை விடுத்து, பேச்சு போட்டியின் நடுவரானார். "தமிழே! ஆங்கிலமே!" என்பதே தலைப்பு. தமிழ் அணியில் நான் நிற்க, வாதத்திற்கு வலு சேர்க்க, வம்படியாக செல்லையா சாரின் பெயரை இழுத்தேன். "நாம் அனைவரும் தமிழ் மொழியை விரும்ப வேண்டும். ஆங்கிலம் ஆங்கிலம் என்று அதன் பின்னால் செல்ல கூடாது" என்றேன். இதற்கு ஓர் வழியில் தமிழம்மா திருமதி ஸ்டெல்லா அவர்களும் காரணம். தமிழ் மொழி உச்சரிப்பில் அசத்துவார். வாசிப்பில் எங்கு நிறுத்த...

how to capture full page screenshot on chrome

Image

Unit testing using TestRestRemplate spring boot

Sample code to use TestRestTemplate in JUnit Test. package com.example.rest; import static org.junit.Assert.assertEquals; import java.util.ArrayList; import java.util.List; import org.json.JSONException; import org.junit.Before; import org.junit.Test; import org.junit.runner.RunWith; import org.springframework.boot.test.context.SpringBootTest; import org.springframework.boot.test.web.client.TestRestTemplate; import org.springframework.boot.web.server.LocalServerPort; import org.springframework.core.ParameterizedTypeReference; import org.springframework.http.HttpEntity; import org.springframework.http.HttpHeaders; import org.springframework.http.HttpMethod; import org.springframework.http.HttpStatus; import org.springframework.http.ResponseEntity; import org.springframework.test.context.junit4.SpringRunner; import com.example.CouchBaseApplication; import com.example.model.Student; @RunWith(SpringRunner.class) @SpringBootTest(classes = CouchBaseApplication.c...