தஞ்சை ஆட்டு மந்தை தெருவின் ஓரத்தில் இருந்தது அந்த ஓலைக் குடிசை. அப்பா கோவிந்தராஜ், அம்மா தனலட்சுமி மற்றும் அவர்கள் பெற்ற ஆறு குழந்தைகளின் உலகம் அது. முத்துப்போலப் பிறந்த ஆறு பிள்ளைகளில், சந்துருதான் கடைசி. அவனுக்கு நான்கு அண்ணன்களும், ஒரு அக்காவும் இருந்தனர். அப்பா வலுவிழக்க, குடும்ப வறுமையின் அனல் தணிக்க, தனலட்சுமி அம்மா விடியற்காலை 4 மணி முதலே தஞ்சை ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி வாசல் கடையில் இடியாப்பம் விற்று, குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். மூத்த பிள்ளைகள் எப்படியோ படித்து, அவரவர் வேலைகளில் அமர்ந்து, தங்கள் குடும்பங்களை மட்டுமே கவனிக்க அவர்களுக்கு வருவாய் கிட்டியது. சிலருக்கு பொருள் இருந்தும் மனமில்லாது போனது. இளையவனான சந்துரு அந்த காலத்து பத்தாம் வகுப்பு அதாவது OLD SSLC வரை படித்திருந்தான். மேற்கொண்டு நல்ல வேலைக்குக் காத்திருக்க அவனால் முடியவில்லை. முதுமையிலும் பெற்றோர் படும் கஷ்டம் அவன் தூக்கத்தை அசைத்துப் பார்த்தது. அலுவலக வேலைக்குப் போக, சட்டை சுத்தமாக இருக்க வேண்டும். டை கட்டி, காலணி அணிய வேண்டும். அதற்கெல்லாம் அவன் தயார் இல்லை. அதற்கான நேரம் ...
கந்தன் வேலைக்குச் சென்று கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊர் திரும்பி இருந்தான். காளிக் கோயிலைத் தாண்டி தான் அவன் வீட்டை அடைந்தாக வேண்டும். கோயிலைக் கடக்க முற்பட்டப் போது அக்கோயிலில் எஞ்சி இருந்த சில பழைமை மாறாக் காட்சிகள் அவனுக்கு அவனது பால்யத்தைத் திரும்பி தந்தன. எட்டாவது வகுப்பு தொடங்கிக் கல்லூரி சேர்ந்த சிறிது நாள் வரை செவ்வாய், வெள்ளி, ஞாயிறு என அட்டவணைப் போட்டு வாரந்தவராது அந்த காளி கோயிலுக்கு சென்றவன் அவன். அவ்வளவு பக்தியா என அவசரப்பட்டு கந்தனுக்கு அதிக மதிப்பெண்களை அள்ளிப் போட்டு விட வேண்டாம். கடவுள் மறுப்பை, பெருமை என அவன் கர்வம் கொண்ட காலம் அது. பிறகு எதற்கு ? பூக்கார அம்மா பிரேமாவின் பூக்கடைக்கு தேவையான சாமான்களை, அவர் வீட்டிலிருந்து காளிக் கோயில் வரை, எடுத்துக் கொண்டுச் சேர்க்க, அவன் பெறும் ரூ.10 கூலிக்காக. பத்து என்பதெல்லாம் அப்போது அவனுக்கு மிகப் பெரிய எண். அதை வைத்து இரண்டு நாள் காலை இரவு சிற்றுண்டியை முடித்து...
இன்று 10-04-2024. பாட்ஷா ரஜினி சொல்லும் நான்காம் எட்டை கடந்தவன் சரவணன். சரியாக சொல்ல வேண்டின் 1990 ஆம் ஆண்டிலேயே பிறந்த அக்மார்க் 90s கிட்ஸ் அவன். காலை எழுந்தவுடன் பல்லைத் தேய்க்கிறானோ இல்லையோ முதல் வேலையாக செல்லைத் தேய்த்துக் கொடுக்கும் குணத்தினன். வழக்கம் போல முழித்தவுடன் முகம் கழுவாமல் முகநூல் பக்கம் வந்து விட்டான். முதல் பதிவாக அவன் கண்ணில் பட்டது இதுதான். " படையப்பா படம் வந்து இன்றோடு 25 வருடம் ஆகிவிட்டது. படையப்பா என்றதும் உங்கள் மனதில் வருவது என்ன? " என்றது அப்பதிவு. புன்முறுத்தான் சரவணன். விட்டத்தைப் பார்த்தான். கொசுவத்தி சுருளைப் போல், கருப்பு வெள்ளையில் ஒரு சக்கரத்தை, வெயில் காலத்தில் விசிறி சுற்ற முயலுமே..., அதுக்கும் காற்று வராமல் நமக்கும் காற்று வராமல், ஆமாம் அந்த வேகத்தில் மனதில் சுற்றி விட்டான...
Comments
Post a Comment